
நான் கடவுள்…?
அது இல்லை.. இது இல்லை..
அதனால்.. இதனால் படம் சரியில்லை..
மூன்று வருடம் உழைத்தற்காக வேண்டுமானால்..
அகோரமாக காட்டியதற்காக வேண்டுமானால்..
விளும்பு நிலை மனிதர்களை நடிக்க வைத்தற்கு வேண்டுமானால்..
பாலாவையும், அவரின் நான் கடவுளையும் பாராட்டலாம்!
என்று பல blogகளில் விமர்சனங்களாக எழுதப் பட்டு இருந்தது..
அவை அவரவரின் விமர்சனப் பார்வை..
நாங்கள் நான் கடவுளைப் பற்றி பொதுவான விமர்சனமாக எழுதாமல்…
அவற்றை வேறு விதமாக அணுகியுள்ளோம்.. அதில் சிலர் எழுதிய பொதுக் கருத்தையும், பலரின் உடன்படாதக் கருத்துகளையும் ஒரு சேர இணைத்து, ஒர் திறனாய்வு அலசலாக நான் கடவுள் திரைப்படத்தினை பற்றி தமிழகத்தின் மூத்த நாடகக் கலைஞர், விமர்சகர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, அவர்களிடத்தில் அலசியிருக்கிறோம்..
இது ஒரு ஆடியோ உரையாடல்.. அய்யா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்… கீழே..
அலசல் 1..
1. நான் கடவுள் பற்றி?
2.விளிம்பு நிலை மனிதர்களை மட்டுமே பாலாவின் அனைத்துப் படங்களும் பேசுவதாகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்?
3.தமிழ் சினிமாவின் சாம்பிரதாயக் கோட்பாடுகளான ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் கதை சொல்லாமல்.. எதிர்மறை வாழ்வியலைக் காட்சியாக்குவது தான் பாலாவின் விருப்பமா?
அலசல் 2..
4.பாலாவின் முந்தையப் படங்கள் போல் இல்லாமல் கதாநாயகனுடைய (ஆர்யாவின்) கதாபாத்திரம் வலிமை இல்லாமல் குறைந்த ஆளுமைக்கு உட்பட்டு.. மொத்தக் கதையின் முடிவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறதாகப் பார்வையாளர்கள் உணர்கிறார்கள்…
5.படத்தின் பிற்பகுதியில் பல காட்சிகளில் தொடர்பு இல்லாமல் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது..குறிப்பாக அம்சவல்லி மாதாகோயில் காட்சியும் அதற்கு அடுத்த காட்சியிலே அவர் அகப்பட்டுக்கொள்வதாக அமைத்துள்ள காட்சியும் முற்றிலும் தொடர்பு இல்லாதவாறு தோன்றுகிறதே?
6.ஜெயமோகனின் ஏழாவது உலகத்தின் சில உணர்வுகளை எடுத்து கொண்ட பாலாவின் இந்தப் படம் பெரிதாக எதையோ இழந்து இருப்பதாகவும்… அதற்கு ஏழாவது உலகத்தையே எடுத்திருக்கலாமே என்றும் சிலர் கருதுகிறார்கள்…
அலசல் 3..
7.புதியப் பாடல்களைப் பயன்படுத்தாமல் பாலா அதிகமாகப் பழையப் பாடல்களை பயன்படுத்துவதைக் குறித்து?
8.இளையராஜா….தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றி?
அலசல் 4..
9.வசனம்… ஜெயமோகன்?
10. படத்தைப் பற்றிய உங்கள் கருத்தினைப் பாலாவிடம் கூறுனீ ர்களா?
இது நாள் வரையுமான திரைப்படம் சார்ந்த அனுபவங்களும், வாழ்வியல் அனுபவங்களும் எங்களுக்குள் உருவாக்கியிருகிற பார்வையின் வெளிப்பாடே இத்திறனாய்வு அலசல்.
….ரசனைக்காரன்

ஸ்லம்டாக் மில்லியினர் படத்திற்காக எ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலையும், மற்றும் அவரது பின்னணி இசை சேர்ப்பை காட்டிலும் மேற்கத்தியவர்களால் அதிகமாக பாராட்டைப்பெற்றது M.I.A என்கின்ற ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம் பாடி இசையமைத்த பேப்பர் பிலேன்ஸ் மற்றும் ஒ சாயா என்னும் பாடல்கள் தான். இவற்றில் மாயாவின் படைப்புகளான பேப்பர் பிலேன்ஸ் கிராம்மி விருதுக்கும், ஒ சாயா ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்லம்டாக் மில்லியினர் இசையமைப்பில் தன்னுடன் பணியாற்றியதற்காக ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கும் மேடையில் மறவாமல் மாயாவுக்கு நன்றி தெரிவித்ததை நினைவில் கொள்ளலாம்.
லண்டன் வாழ்வியலையும், ஈழ அரசியலையும் சித்தரித்த மாயாவின் graffiti ஓவியங்கள் 2001 -ல் Alternative Turner விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் மூலம் Elastica குழுவை சேர்ந்த ஜஸ்டின் ஃபிரிச்மேனின் தங்களது இரண்டாவது ஆல்பமான The Menance -ன் அட்டைப்படதுக்கு மாயவை நாடினார்.. அடுத்து அந்த குழுவின் அமெரிக்கா இசைப்பயணத்தையும், அவர்களது Elastica-வின் “Mad Dog God Dam” இசை வீடியோ பதிவையும் செய்யும் வாய்ப்பும் மாயாவுக்கு..அந்த பயணத்தில் தான் மாயாவுக்கு இசையின் மீது நம்பிக்கை பிறந்தது.. மேலும் லண்டனில் உள்ள சென்ட்ரல் செயிண்ட் மார்டின்ஸ் ஆர்ட் அகேடமியில் தனது கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப்பாடல்கள் இயற்றுவதும் தானாகவே ஆல்பங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாயாவின் முதல் இசை ஆல்பமான அருளரில், கிலாங் (Galang) மற்றும் சன் பிளவர் (Sunflower) எனும் பாடல்கள் கல்லூரியின் வானொலியிலும், ஃபையில் ஷரிங்கிலும் அதிகமாக பிரபலமானது மட்டுமல்லாமல் ஷோ பிஸ் ரெகார்ட்சில்லும் அதிகமான பதிவை ஏற்படுத்தியது… அடுத்து வந்த மாயாவின் கலா (2005), இசை ஆல்பம் சென்சார்களில் சிக்கினாலும் பில் போர்டின் டாப் 200 பாடல்களில் 18 வது இடத்தை பெற்றது.







