ரசனைக்காரன்

July 4, 2011

‘ஆண்மை தவறேல்’ என்கின்ற இந்த படம்..

Filed under: சினிமா — rasanaikaaran @ 12:40 pm

விமர்சனம் எழுதி பெருமை சேர்க்க இங்க நாங்கள் வரவில்லை…படத்தை பார்த்துவிட்டு மனதில் ஏற்பட்டுள்ள பாரத்தை உங்களிடம் இறக்கி வைக்க உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்!
இந்த படத்தைப்பற்றி நிறைய்ய பதிவாளர்கள் உணர்வோடு எழுதி இருந்தார்கள்…அதனை கவனிக்காத இந்த தர டிக்கெட்டை முதலில் மன்னிக்கவும்!

இந்த படத்துல்ல…

காதல் என்றப் பெயரால் …

நட்பு என்றப் பெயரால் …

சினிமா… வேலை…புகழ்பணம்என்றப் பெயரால்

பொருளாதாரம் என்ற சூழ்ச்சியின்  பெயரால் ..உங்களை அறியாமல்

உங்கள் வீட்டுப் பெண் பாதிக்கப் படலாம்ஏன் நம்ம வீட்டுப் பெண்ணும்?

அதனை காப்பது நமது நாட்டின் கடமையல்ல..

நமது உயிரை(பெண்ணை) காப்பது… நமது கடமை மட்டுமே தான்!

தயவு செய்து…தயவு தாட்சாண்யம் இன்றி உங்கள் வீட்டு பெண்ணை சந்தேகப் படுங்கள்

உங்களுக்கு சந்தேகப்படும்படி நடந்தால்!

‘ஆண்மை தவறேல்’  என்கின்ற இந்த படம்..

விபச்சாரத்திற்காக பெண்களை கடத்தும் கும்பலைப் பற்றியதுதான் கதை. எப்படி பெண்களை கடத்துகிறார்கள்? அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள்? அவர்களுடைய நெட்வொர்க் எப்படி படர்ந்தது என அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘ஆண்மை தவறேல்’ படம்.

நன்றி திருமிகு.’ஆண்மை தவறேல்’ இயக்குனர்.குழந்தை.வேலப்பன் அவர்களுக்கு….இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்… நடிகைகள்…கலைஞர்களுக்கு அனைவருக்கும்  எங்கள் நன்றிகள்!…உண்மையில் சமுதாய விழிப்புணர்வு படம் எடித்து இருக்கீங்க இயக்குனர் அவர்களே!

இந்த படத்தை  பார்க்காம போனா…அது ஒரு குடும்பத்திற்கு மட்டும் நஷ்டமல்ல…ஒருபெண்ணை பெற்ற  தகப்பனுக்கு.. ஒரு நண்பனுக்கு..ஒரு காதலனுக்கு.. ஒரு கணவனுக்கும்..ஏன் ஒரு அழகான வாழ்கையின் கனவுக்கும் நஷ்டம் தான்!

முக்கியமாகா ஒரு பெண்ணுக்கு நஷ்டம் தான்!…தயவு செய்து இது அறிவுரையல்ல..ஒரு நட்புக்கான..ஒரு உணர்வுக்கான  பகிர்வு தான்…

பெண்களே..நீங்க சந்தோசமாக அனுபவிக்க வேண்டிய ஒரே ஒரு வாழ்க்கையை..கேவலமான சமுதாயத்தினரான ஒரு பகுதியினரின் சந்தோஷத்திற்காக.. உங்கள் வாழ்கையை… அஜாக்கிரதையினால் முக்கியமா…காதல்..நட்பு…சினிமா… புகழ்… பணம்…பொருளாதாரம்…என்றப் பெயரால் இழந்து விடாதிர்கள்!  முதலில் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவும்!

கவலையுடன்…

தர டிக்கெட்

நன்றி திரு.லோகேஷ் அவர்களுக்கு..அவருடைய காரம், காபி சினிமா பதிர்வை(http://goo.gl/tUWTt) பார்த்தே இந்த பதிவை எழுத  ஊந்தியது மனது!

*-இந்த பகுதி முழுவதும் பக்கத்தில் கடன்வாங்கியது

June 4, 2011

நமது பாடும் வானம்பாடி SP.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ரசனைக்காரனின் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Filed under: சினிமா — rasanaikaaran @ 1:27 pm

May 16, 2011

பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்…

Filed under: சினிமா,வீடியோ — rasanaikaaran @ 10:03 pm
Tags: , ,

இயக்குனர் பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்…பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்… விஷால், ஆர்யா, VM.குமார், RP, அம்பிகா, மது விஷாலினி, ஜனனி அய்யர் மற்றும் பலர் நடித்துள்ளனர்! இசை: யுவன் ஷங்கர் ராஜா.. வசனம்: எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்

April 15, 2011

அண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம்!

Filed under: சினிமா — rasanaikaaran @ 2:26 pm

அண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம் | இசை: யுவன் ஷங்கர் ராஜா | வரிகள்: நா.முத்துக்குமார்

நன்றி நண்பர் திரு.சதீஷ் ராஜ்

December 30, 2010

ரசனைக்காரன் 2010 திரைப்பட விருதுகள்

Filed under: சினிமா — rasanaikaaran @ 8:18 am

தமிழ் சினிமாவில் இந்த 2010ல்  அதிகப்படங்கள் வெளிவந்தாலும்..வெகு குறைவான படங்களே  மக்களின் மானசீக ஆதரவைப் பெற்றது..சில  புதிய முயற்சிகள் மீடியாவின் விளம்பர சூழ்ச்சிகளையும்  மீறி ஓடியது என்பதே பெரிய சாதனை..அவற்றில் நாங்கள் தேர்வு செய்த படங்களை 2010ல் சிறந்த படைப்பாக இங்கே வெளியிட்டுவுள்ளோம்..மேலும் மக்களின் ஆதரவைப் பெற்ற   பல வழக்கமான மசாலாப்படங்களையும் நமது கணிப்புகளில் இணைத்துள்ளோம்..

 

 

 

 

விருதுக்குழு 2010:

தர டிக்கெட், ரசனைக்காரன் விமர்சன குழு மற்றும் நண்பன் தமிழ்குமார்( சிங்கப்பூர்)

 

October 16, 2010

ரசனைக்காரன்: அடுத்த நம்பிகையான தமிழ் சினிமாக்கள்!

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்-பத்மஸ்ரீ கமல்ஹசன் யுகங்களுக்கு  பிறகு, (இனிமேல்) இயக்குனர் கைகளில் தான் தமிழ் சினிமா. நாங்கள் சொல்லவில்லை மக்கள் அப்படி நினைக்கிறார்கள். அவ்வாறு இனி வரவிருக்கும்  திரைப்படங்களில் ஒரு ரசனைக்காரனாக ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்கள்..இதோ..

 

பாலாவின் அவன் இவன்

இந்தப்படத்திற்கு பெருசா விளம்பரமே தேவையில்லை.. பாலா அண்ணாச்சியின் படம்..
மொத்த இந்தியாவே அரள வைக்கும் என்பதில் ஐய்யமில்லை. எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் வசனத்தில்,
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவில். ஆர்யா, விஷால்,GK,ஜனனி அய்யர்,மது ஷாலினி மற்றும் கௌரவ
தோற்றத்தில் சூர்யாவும்  நடிக்கிறார்கள்..யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அமீரின் ஆதிபகவன்

அமீர் என்றால் அதுவும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் …சந்தேகமில்லை!
இந்தப்படத்தில் ஜெயம் ரவி, மம்தா மோகன்தாஸ் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சீமானின் பகலவன்

அண்ணன் சீமான் சிறையில் இருந்தாலும்..ஈழத்தமிழர்கள் அதிகம் எதிர்நோக்கும் திரைப்படம்.
ஈழத்தின் அவலநிலையை உலகுக்கு பறைசாற்றும் படமாகதான் இருக்கும் என்று அடித்து சொல்லலாம்.
மசாலா படங்களை மீறி விஜய் நடிக்கும் முதல் படம் இது.


சசிகுமாரின் பெயரிடப்படாத அடுத்தப்படம்….வைபவ் , அனன்யா , சமுத்திரகனி , அழகப்பன் நடிக்கிறார்கள்.. அவ்ளோ தான் நமக்கும் தெரியும்.

ஆரண்ய காண்டம்


ஜாலியான  SPB.சரண் கூடராத்திலா..இப்படி ஒரு அருமை..என்று திரை முன்னோட்டத்தில் மிரள வைத்திருக்கும் படம். புதியவர் தியாகராஜன் தந்த நம்பிக்கை..இளைஞர் வட்டாரங்களில் அதிகமான  பாராட்டையும், ஆதரவையும் பெற்றிருக்கும் சமிபத்திய திரை  முன்னோட்டம்  இதுவாகத்தான் இருக்கும். இந்த படத்தில் ஹிந்தி நடிகர் ஜக்கி ஷெரிப், ரவி கிருஷ்ணா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வெற்றிமாறனின் ஆடுகளம்


பொல்லாதவன் கூட்டணியுடன் மீண்டும்  வெற்றிமாறன் இறங்கும் களம்.. தொழிநுட்ப கலைஞர்கள் முதற்கொண்டு அதிகமாக எதிர்பார்க்கும் இந்தப்படத்திற்கு GV.பிரகாஷ் குமாரின் இசை.

AR  முருகதாஸின் ஏழாம் அறிவு

ஹிந்தி கஜினியின்  வெற்றிக்கு பிறகு AR  முருகதாஸ் இயக்கம் Sci-Fi வகையான திரைப்படம் ஏழாம் அறிவு.. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா, சுருதி ஹாசன் முதலியோர்  நடிக்கின்றனர்.

சுசீந்தரனின் அழகர்சாமியின்  குதிரை

கௌதம்  மேனன் எடுக்கும் முதல் திரைப்படம் மன்னிக்கவும் தாயரிக்கும் நல்லப்படம்…நடிகர் அப்புக்குட்டி, சரண்யா நடிக்கும் இந்தப்படத்திற்கு  இசைஞானியின் இசை.

செல்வராகவனின் மறவன்
மாலை நேரத்து மயக்கத்தை மாற்றிவிட்டு செல்வராகவனின் அடுத்த முயற்சி.. தனுஷ் நடிக்கும் இந்தப்படத்தில் GV.பிரகாஷ் குமாரின் இசை.

மிஸ்கினின் நந்தலாலா

படம் உலக
த்திரையில் தமிழனின் பெருமை பேசப்படும் என்று பார்த்தவர்கள் அனைவரும் சொல்லிவிட்டனர். இசைஞானியின் இசை கலங்க வைக்குமாம். படம் கிகுஜிரோ(kikujiro) தழுவலாக இல்லாமல் இருந்தால் ஆறுதல் தான்.

 

பிரபு சாலமனின் மைனா…

கமல்ஹாசனும், இயக்குனர் பாலாவும் சர்டிபிக்கேட்  கொடுத்திருக்கும் படம்..

காட்சிகளும்  பசுமையுடன் ஈர்க்கிறது..

 

காத்திருக்கிறோம்!

சினிமா என்கிற கலையும் ஒரு ரசனைக்காரனை பொறுத்தவரை ஒரு அழகான காதலுக்கு உரிய எதிர்பார்ப்புகள் தான்.இவற்றில் சில படங்கள் காப்பியங்களாக இருக்கலாம்..எதிர்பார்ப்புகளை  ஏமாற்றாமல் இருந்தால் சரி!!

….ரசனைக்காரன்.

January 23, 2010

தேசிய விருதை தலைநிமிர வைத்த தமிழன்..பாலா

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:14 am

அண்ணன் பாலாவுக்கு தேசிய விருது மனமுருகிய தமிழர்களின் வாழ்த்துகள்!

நான் கடவுள் படத்துக்காக சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது பாலாவுக்குக் கிடைத்துள்ளது.

தேசிய விருதை தலைநிமிர வைத்த தமிழன்..

கலக்கிட்ட அண்ணாச்சி!

பெருமையுடன்

ரசனைக்கரன் + தர டிக்கெட்

January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்…

Filed under: சினிமா — rasanaikaaran @ 12:45 pm


இந்த படத்திற்கு  விமர்சனம் ஒரு கேடா! என கண்டிப்பாக புரட்சி தலைவர் ரசிகர்களும், சோழனின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழர்கள் கண்டிப்பாக உரக்க சொல்வார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் என்கின்ற தமிழ் சினிமாவின் சாதனை பெயரை சிதைத்திருக்கிறார் செல்வராகவன்.

அந்த பெயரில் மாபெரும் சோழ  வரலாற்றை  அரைகுறையாக மன்னிக்கவும் கற்பனையாக ஆராய்ந்து, அதனை  மிகவும் கேவலமான முறையில் நிகழ் காலத்துடன் இணைத்து adventure-fanatsy என்கின்ற பித்தத்தில், செல்வராகவன் எடுத்து இருக்கும் வாந்தி தான், தற்போது பொங்கல் திருநாள் அன்று வந்து இருக்கும் இந்த படம்.

அருமையான பார்த்திபனின் நடிப்பும், ராம்ஜியின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் செய்த  எண்ணற்ற தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பும் மற்றும்   துணை நடிகர்களின் நடிப்பும்  சரியான கதை மற்றும் திரைக்கதை நகர்வுகள் இல்லாமல் வீண்ணடிக்கப்பட்டுள்ளது.

ரீமா சென் ( சந்திரமுகி பாதிப்பு), கார்த்தி (அதே பருத்தி வீரன் சாயல்), உடை அலங்காரம் செய்த எரீமா அலி..இவர்களை பரவாவில்லை என பாராட்டலாம் மன்னிக்கவும்  வாழ்த்தலாம்.

மிகவும் கேவலமானது என்றால் அது..

1.செல்வராகவனின் தைக மற்றும் ரைக்திதைக (குழம்பிய கதை மற்றும் திரைக்கதை)

2.அந்த சோழ மகாராணி, கூட்டு வல்லுறவில் கொடுமைப்படுத்தப்படும்  காட்சியில் அப்படி போடு  பாட்டு பின்னணியில்..சோழனையும் வரலாற்றையும் கற்பனை என்ற பெயரில் கேவலப்படுத்திய கொடுமை.   இது தான் சரித்திரமும் தருத்திரியமும் இணைத்து நீங்கள் ஈன்ற கற்பனை வளமையோ? செல்வரகாவா?

3.பின்னணி இசையில் இசையை கொலை செய்திருக்கின்ற  ஜீவி பிரகாஷின் பின்னணி இசை தான்  . அந்த கால தமிழிசையை பற்றி ஆராய்ந்து இசையமைத்துள்ளதாக  பேட்டிகளில் வாய்க்கூசாமல் பொய் சொல்லி இருக்கின்றார் என இப்போது வெட்ட வெளிச்சமாக உணர்த்துகிறது அவரது அனுபவமற்ற இசை.

தற்போதைய தமிழ் சினிமாவில் செல்வராகவன் ஸ்டைல் என்று சொல்லக்கூடிய கிளு கிளுப்புகளும், விடலை வசனங்களும்,  ஆங்காங்கே தூவியும், இரைத்தும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இயக்குனர் என்ற தற்பெருமை இந்த படத்திலும் பேசித்திரியலாம் செல்வராகவன்.  இந்த முறை கூடுதலாக S.A.சந்திரசேகரே வெட்கி தலைகுனிய வைக்கும்  கூட்டு  பாலியல் வல்லுறவு வேறு.

பாவம் தலைவிதியுடன் ரவீந்திரன்..

தலைவலியுடன்..தரடிக்கெட்

January 8, 2010

ஜனநாதனின் பேராண்மை – ஒரு பார்வை

பேராண்மை மிகுந்த தலைவரின் பிறந்தநாளில் பேராண்மை திரைப்படம் பற்றிய திறனாய்வுக் கூட்டம்.

கூட்ட ஏற்பாடு : தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, தஞ்சாவூர்.

பகுதி 1

..நாகேந்திரன் அறிமுகவுரையைத் தொடர்ந்து  ..மு.இராமசாமி பேசியது.

பகுதி2


..மு.இராமசாமி பேசியது.

பகுதி3


..மு.இராமசாமி பேசியது.

பகுதி4


..மு.இராமசாமி பேசியது.

பகுதி5


..மு.இராமசாமி பேசியது.

பகுதி6

..மு.இராமசாமி பேசியது.

பகுதி7


..நாகேந்திரன்  பேசியது.

பகுதி8


..வைகறை பேசியது.

பகுதி9

நான் நேற்றைக்குத்தான் படம் பார்த்தேன்! காட்டில் கொரில்லா யுத்த முறைகளை அந்த பெண்களுக்குக் கற்று தரும் காட்சி  பெண் புலிகளுக்கு பயிற்சி கொடுக்கிற காட்சியை நினைவுபடுதுகிறது…


..மு.இராமசாமியின் விளக்கம்.

பகுதி10

தமிழ்ச் சமுகம் மற்றும் உலக அரசியலை பேச  ஜனநாதன் பேராண்மை திரைப்படத்தை ஒரு தளமாக பயன்படுத்தி இருக்கிறார் என உறுதியாக நம்புகிறீர்களா?


..மு.இராமசாமியின் விளக்கம்.

தொடரும்…

January 1, 2010

தரடிக்கெட் பார்வையில் ரசனைக்காரன் 2009 விருதுகள்

Filed under: சினிமா — rasanaikaaran @ 1:54 am

விமர்சனக் குழு : ரசனைக்காரன் & தமிழ் குமார்

Next Page »

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.