January 23, 2010
January 14, 2010
ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்…

இந்த படத்திற்கு விமர்சனம் ஒரு கேடா! என கண்டிப்பாக புரட்சி தலைவர் ரசிகர்களும், சோழனின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழர்கள் கண்டிப்பாக உரக்க சொல்வார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் என்கின்ற தமிழ் சினிமாவின் சாதனை பெயரை சிதைத்திருக்கிறார் செல்வராகவன்.
அந்த பெயரில் மாபெரும் சோழ வரலாற்றை அரைகுறையாக மன்னிக்கவும் கற்பனையாக ஆராய்ந்து, அதனை மிகவும் கேவலமான முறையில் நிகழ் காலத்துடன் இணைத்து adventure-fanatsy என்கின்ற பித்தத்தில், செல்வராகவன் எடுத்து இருக்கும் வாந்தி தான், தற்போது பொங்கல் திருநாள் அன்று வந்து இருக்கும் இந்த படம்.
அருமையான பார்த்திபனின் நடிப்பும், ராம்ஜியின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் செய்த எண்ணற்ற தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பும் மற்றும் துணை நடிகர்களின் நடிப்பும் சரியான கதை மற்றும் திரைக்கதை நகர்வுகள் இல்லாமல் வீண்ணடிக்கப்பட்டுள்ளது.
ரீமா சென் ( சந்திரமுகி பாதிப்பு), கார்த்தி (அதே பருத்தி வீரன் சாயல்), உடை அலங்காரம் செய்த எரீமா அலி..இவர்களை பரவாவில்லை என பாராட்டலாம் மன்னிக்கவும் வாழ்த்தலாம்.
மிகவும் கேவலமானது என்றால் அது..
1.செல்வராகவனின் தைக மற்றும் ரைக்திதைக (குழம்பிய கதை மற்றும் திரைக்கதை)
2.அந்த சோழ மகாராணி, கூட்டு வல்லுறவில் கொடுமைப்படுத்தப்படும் காட்சியில் அப்படி போடு பாட்டு பின்னணியில்..சோழனையும் வரலாற்றையும் கற்பனை என்ற பெயரில் கேவலப்படுத்திய கொடுமை. இது தான் சரித்திரமும் தருத்திரியமும் இணைத்து நீங்கள் ஈன்ற கற்பனை வளமையோ? செல்வரகாவா?
3.பின்னணி இசையில் இசையை கொலை செய்திருக்கின்ற ஜீவி பிரகாஷின் பின்னணி இசை தான் . அந்த கால தமிழிசையை பற்றி ஆராய்ந்து இசையமைத்துள்ளதாக பேட்டிகளில் வாய்க்கூசாமல் பொய் சொல்லி இருக்கின்றார் என இப்போது வெட்ட வெளிச்சமாக உணர்த்துகிறது அவரது அனுபவமற்ற இசை.
தற்போதைய தமிழ் சினிமாவில் செல்வராகவன் ஸ்டைல் என்று சொல்லக்கூடிய கிளு கிளுப்புகளும், விடலை வசனங்களும், ஆங்காங்கே தூவியும், இரைத்தும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இயக்குனர் என்ற தற்பெருமை இந்த படத்திலும் பேசித்திரியலாம் செல்வராகவன். இந்த முறை கூடுதலாக S.A.சந்திரசேகரே வெட்கி தலைகுனிய வைக்கும் கூட்டு பாலியல் வல்லுறவு வேறு.
பாவம் தலைவிதியுடன் ரவீந்திரன்..
தலைவலியுடன்..தரடிக்கெட்
January 8, 2010
ஜனநாதனின் பேராண்மை – ஒரு பார்வை
பேராண்மை மிகுந்த தலைவரின் பிறந்தநாளில் பேராண்மை திரைப்படம் பற்றிய திறனாய்வுக் கூட்டம்.
கூட்ட ஏற்பாடு : தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, தஞ்சாவூர்.
பகுதி 1
..நாகேந்திரன் அறிமுகவுரையைத் தொடர்ந்து ..மு.இராமசாமி பேசியது.
பகுதி2
..மு.இராமசாமி பேசியது.
பகுதி3
..மு.இராமசாமி பேசியது.
பகுதி4
..மு.இராமசாமி பேசியது.
பகுதி5
..மு.இராமசாமி பேசியது.
பகுதி6
..மு.இராமசாமி பேசியது.
பகுதி7
..நாகேந்திரன் பேசியது.
பகுதி8
..வைகறை பேசியது.
பகுதி9
நான் நேற்றைக்குத்தான் படம் பார்த்தேன்! காட்டில் கொரில்லா யுத்த முறைகளை அந்த பெண்களுக்குக் கற்று தரும் காட்சி பெண் புலிகளுக்கு பயிற்சி கொடுக்கிற காட்சியை நினைவுபடுதுகிறது…
..மு.இராமசாமியின் விளக்கம்.
பகுதி10
தமிழ்ச் சமுகம் மற்றும் உலக அரசியலை பேச ஜனநாதன் பேராண்மை திரைப்படத்தை ஒரு தளமாக பயன்படுத்தி இருக்கிறார் என உறுதியாக நம்புகிறீர்களா?
..மு.இராமசாமியின் விளக்கம்.
தொடரும்…
January 1, 2010
December 31, 2009
சித்திரவதைகள் of தமிழ் சினிமா
சித்திரவதைகள் of தமிழ் சினிமா
1. *ரீமிக்ஸ் படுகொலை : சிலம்பாட்டம் படத்தில் “வச்சுகவா” பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் படுகொலை செய்த யுவன் ஷங்கர் ராஜா.
2.*Dance படுகொலை : ஜிம்நாச்டிக்ஸ் பயிற்சியில் சிரமப்பட்டு சிம்பு ஆடுவது போல சிலம்பாட்டம் படத்தில் dance ஆடி சித்திரவதை செய்தது.
3.Over Acting Torture: சூர்யா மற்றும் சேரன். சேரன் மன்னிக்கவும் உண்மையைத்தான் சொல்லுகிறேன்
4.Herosim Torture: *சிம்பு( சிலம்பாட்டம் ) அமீர்( யோகி) மற்றும் விஷால்( சத்யம் , தோரணை)
5. Marketing Torture: மாசிலாமணி போன்ற கொத்துப்படங்களுக்கு Marketing செய்த சன் பிக்சர்ஸ்.
ஆறுதல் of தமிழ் சினிமா
மிகப்பெரிய ஆறுதல்: விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலிருந்து நிறைய பஞ்சர் dialogues-களை நீக்கி மக்களை முடிந்தவரை காப்பாற்றியது நன்றி சன் பிக்சர்ஸ்
November 7, 2009
அமீரின் யோகி.. சிறப்பு திரை முண்ணோட்டம்.
இயக்குனர் அமீர் திரைக்கதை, வசனம் எழுதி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, யுவன் அழகான இசையில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் வெளிவர இருக்கும் “யோகி” படத்தின் திரை
முண்ணோட்டம். அமீரின் இந்த இரண்டு வருட உழைப்புக்காக தமிழ் திரைத்ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்..
February 11, 2009
நான் கடவுள்…ஒரு திறனாய்வு அலசல்

நான் கடவுள்…?
அது இல்லை.. இது இல்லை..
அதனால்.. இதனால் படம் சரியில்லை..
மூன்று வருடம் உழைத்தற்காக வேண்டுமானால்..
அகோரமாக காட்டியதற்காக வேண்டுமானால்..
விளும்பு நிலை மனிதர்களை நடிக்க வைத்தற்கு வேண்டுமானால்..
பாலாவையும், அவரின் நான் கடவுளையும் பாராட்டலாம்!
என்று பல blogகளில் விமர்சனங்களாக எழுதப் பட்டு இருந்தது..
அவை அவரவரின் விமர்சனப் பார்வை..
நாங்கள் நான் கடவுளைப் பற்றி பொதுவான விமர்சனமாக எழுதாமல்…
அவற்றை வேறு விதமாக அணுகியுள்ளோம்.. அதில் சிலர் எழுதிய பொதுக் கருத்தையும், பலரின் உடன்படாதக் கருத்துகளையும் ஒரு சேர இணைத்து, ஒர் திறனாய்வு அலசலாக நான் கடவுள் திரைப்படத்தினை பற்றி தமிழகத்தின் மூத்த நாடகக் கலைஞர், விமர்சகர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, அவர்களிடத்தில் அலசியிருக்கிறோம்..
இது ஒரு ஆடியோ உரையாடல்.. அய்யா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்… கீழே..
அலசல் 1..
1. நான் கடவுள் பற்றி?
2.விளிம்பு நிலை மனிதர்களை மட்டுமே பாலாவின் அனைத்துப் படங்களும் பேசுவதாகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்?
3.தமிழ் சினிமாவின் சாம்பிரதாயக் கோட்பாடுகளான ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் கதை சொல்லாமல்.. எதிர்மறை வாழ்வியலைக் காட்சியாக்குவது தான் பாலாவின் விருப்பமா?
அலசல் 2..
4.பாலாவின் முந்தையப் படங்கள் போல் இல்லாமல் கதாநாயகனுடைய (ஆர்யாவின்) கதாபாத்திரம் வலிமை இல்லாமல் குறைந்த ஆளுமைக்கு உட்பட்டு.. மொத்தக் கதையின் முடிவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறதாகப் பார்வையாளர்கள் உணர்கிறார்கள்…
5.படத்தின் பிற்பகுதியில் பல காட்சிகளில் தொடர்பு இல்லாமல் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது..குறிப்பாக அம்சவல்லி மாதாகோயில் காட்சியும் அதற்கு அடுத்த காட்சியிலே அவர் அகப்பட்டுக்கொள்வதாக அமைத்துள்ள காட்சியும் முற்றிலும் தொடர்பு இல்லாதவாறு தோன்றுகிறதே?
6.ஜெயமோகனின் ஏழாவது உலகத்தின் சில உணர்வுகளை எடுத்து கொண்ட பாலாவின் இந்தப் படம் பெரிதாக எதையோ இழந்து இருப்பதாகவும்… அதற்கு ஏழாவது உலகத்தையே எடுத்திருக்கலாமே என்றும் சிலர் கருதுகிறார்கள்…
அலசல் 3..
7.புதியப் பாடல்களைப் பயன்படுத்தாமல் பாலா அதிகமாகப் பழையப் பாடல்களை பயன்படுத்துவதைக் குறித்து?
8.இளையராஜா….தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றி?
அலசல் 4..
9.வசனம்… ஜெயமோகன்?
10. படத்தைப் பற்றிய உங்கள் கருத்தினைப் பாலாவிடம் கூறுனீ ர்களா?
இது நாள் வரையுமான திரைப்படம் சார்ந்த அனுபவங்களும், வாழ்வியல் அனுபவங்களும் எங்களுக்குள் உருவாக்கியிருகிற பார்வையின் வெளிப்பாடே இத்திறனாய்வு அலசல்.
….ரசனைக்காரன்
February 6, 2009
பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…

ஒரு படம் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது சமீபத்தில் பெரிய விஷயம்..
கோடீஸ்வரன் முதல் தெருகோடியில் வாழ்பவனையும் ஒரே உணர்வில் இணைத்து விடும் வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறான சினிமாவை எடுக்கக்கூடிய வித்தை தெரிந்த இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…
முடிஞ்சா இது மாதிரி படம் எடுங்க… இல்லேன்னா கோயில் வாசல்ல போய் பிச்சை எடுக்க சொல்லுங்க அந்த so called popular tamil directors -ச!
…கல்லூரி மாணவன்.
ஜீரணிக்க முடியலைங்க.. படம் மிரட்டியிருக்காரு பாலா..
…ஆட்டோ ஓட்டுனர்.
Its completely a cult movie of recent times(even in recent decades of indian cinema)..
…திரைமொழி படிக்கும் மாணவன்.
மனநலம் குன்றியவர்களை படத்தில் உன்னத கலைஞர்களாக வாழவைத்திருகிறார் பாலா!
…நாடக நடிகர்.
இந்த ஆளால மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்.. போட்ட லீவ்வுக்கும் கொடுத்த காசுக்கும் அர்த்தம் தரக்கூடிய படம்.. அவ்ளோ தான் சொல்ல முடியும் இப்போ.. மனச கசக்கிட்டாங்க பாலா..
…சாப்ட்வேர் எஞ்சினியர்.
இந்த படம் ஓடலைன்னா இனிமே தமிழ் சினிமாவுல படம் எடுக்கிறதே வேஸ்ட்!
…சென்சார் போர்டு அதிகாரி பாபு ராமசுவாமி ( இந்த தகவல் மட்டும் ஏற்கனவே படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பாபு ராமசுவாமி சொன்ன செய்தியை யூகி சேது பகிர்ந்து கொண்டது..)
தற்போதைக்கு இத்துடன் முடித்து கொள்கிறோம்..
விரைவில் விமர்சனத்துடன்..
January 28, 2009
வால்ஸ் வித் பஷிர்..திரை விமர்சனம்

கோல்டன் குலோப்பின் அயல் சினிமாவின் விருதையும் பெற்று ஆஸ்காரின் வாசலில் நின்று உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுயிருக்கும் இன்னொரு படம் “வால்ஸ் வித் பஷிர் (waltz with bashir)” எனும் இஸ்ரேலிய மொழி திரைப்படம்.இதன் சிறப்பு உலகிலேயே முதல் முறையாக வந்து இருக்கும் அனிமேஷன் ஆவணப் படம் என்பது.
இஸ்ரேலிய போர் வீரரான அரி போல்மேன் இயக்கியிருக்கும் வால்ஸ் வித் பஷிரில், இஸ்ரேலின் ஆதரவுடன், மேற்கு லெபனோனில் 1980 களில் நடந்தேறிய சப்ரா சாட்திலா கொலைவெறி தாக்குதலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தனது மறந்து போன அந்த கொடூர அனுபவத்தை நினைவு கொள்ள, போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை தேடி செல்கிறார் அரி போல்மேன்..என ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம்.
BBCயின் தகவலின் படி செப்டம்பர் 16முதல்18, 1982 வரை மேற்கு லெபனோனில் இஸ்ரேலிய படையின் கண்காணிப்பில் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் சுமார் 800 பேர்கள் சப்ரா மற்றும் சாட்திலா இடங்களில் கிறிஸ்துவ பாலங்கிஸ்ட் குழுவால் கொடூரமாக கொல்ல ப்பட்டனர்.
சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன் லெபனோன் நாட்டு தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த இஸ்ரேலிய ஆதரவு கிறிஸ்துவ பாலங்கிஸ்டின் தலைவர் பஷிர் ஜெம்மையில் பாலஸ்தீனர்களால் கொள்ளப்பட்டார். அதற்கு பழிவாங்கவே இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக ஆதரவு அளித்து என்றும் தெரிவிக்கிறது.
மறந்து போன இந்த சம்பவம் தன் கனவில் வந்து போவதை உணர்ந்த அரி போல்மேன், அதனின் உண்மையை அறிய லெபனோனின் மேற்கு மீரூட்டுக்கு செல்கிறார். அங்கு போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், மனதத்துவ நிபுணர் ஒருவரையும் மேலும் ரான் பென் யிஸ்காய் எனும் பத்திரிகையாளர் ஒருவரையும் சந்தித்து உரையாடி உண்மையை கண்டறிவது தான் மீதி கதை.
கலை இயக்குனர் டேவிட் போலன்ஸ்கீ, அனிமேஷன் இயக்குனர் யோனி குட்மேன் மற்றும் இசையமைத்த மாக்ஸ் ரிசெர் ஆகிய மூவரும் அரி போல்மேனுடன் இத்திரைபடத்திற்காக நான்கு வருடம் உழைதிருக்கின்றனர். முதலில் 90 நிமிடத்திற்கான படத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ரோடோஸ்கோபி முறையில் திரைக்கதைக்கேற்ப அதனை 2300 வரைபடங்களாக பிரித்து காமிக் கதபாத்திரங்களுக்கான நகர்வை Flash, 3D போன்ற தொழில்நுட்பங்களின் துணையுடன் திரை சுருளிலேயே வரைந்துள்ளனர்.
அனிமேஷன் படம் தானே என்று பார்வையாளர்களும் அலட்சியமாக கருதாமல் காட்சிகளில் ஒன்றி வரலாற்றின் உண்மைகளுடன் ஆராய தூண்டுவது படத்தின் பெரிய வெற்றி. மேலும் உண்மை சூழலில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கதைகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது, வந்த ஏனைய காமிக்ஸ் திரைப்படங்களை காட்டிலும் புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளதை உணர முடிகிறது என தர டிக்கெட் தெரிவிக்கிறார்.


















