அருமையான பதிவு..இந்த குறும்படத்தை உருவாக்கிய கனவுகளுக்கு ரசனைக்காரனின் வாழ்த்துக்கள்!
February 19, 2011
January 27, 2011
இயக்குனர் பாலாவின் பேட்டி: பக்கத்தில் கடன் வாங்கியது தான்! பரவாயில்லை படியுங்கள்!
சமிபத்தில் பார்த்த பல டிவி பேட்டிகள் பார்த்து பொறுக்க முடியாமல்…இந்த பதிவை எழுதுகிறேன்!!
வணக்கம் அண்ணாச்சி..அத்தாட்ச்சி…..நான் தான் உங்க தர டிக்கெட்டு..நல்லா இருக்கீகளா?
சரி விஷயத்துக்கு வாரேன்!
மக்களை முட்டாள்ளுனும்…
அவர்களுக்கு சினிமாவைப் பற்றி ஒன்னுமே தெரியாதுனும்..
அதனால் தான் நாங்க உலகசினிமாவை அவர்களுக்கு அறிய வைக்க…
அவர்கள் ரசனைகளை உலகதரத்துக்கு மாற்ற…
ஒரு படத்த எடுத்திருக்கோம்னு (அவர்கள் எடுத்த ஜெராக்ஸ் உலகசினிமாவை) ப்ரோமோட் பண்ணாமல்,
பில்ட்-அப் கட்டிடங்கள் கட்டாமல்..
இன்னமும் கலை வல்லமை படைத்த பல தமிழ் இயக்குனர்கள் நம்மிடத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் இதுவரை எடுத்திருக்கின்ற ஒரு படத்தை இந்த அரவேக்காட்டு கும்பல் (கௌதம் மேனன், மிஷ்கின், சில சமயம் சேரனே) மாதிரி, அதன் அருமை பெருமைகளை அவர்கள் தெரு தெருவாய்ப் போய் முச்சந்திகளில் குலைப்பதில்லை.. மாறாக தங்கள் படைப்புகளினால் மக்களின் மனதுகளில் உணர்வாக பதிவாகிறார்கள்!
டேய் அரவேக்காடுகளா!
உருப்படியான சினிமாவை முதல்ல நீங்க எடுங்க…மக்களுக்கு புடிச்சிருந்த அவங்களே ப்ரோமோட் பண்ணுவாங்க.. சும்மா நைய் நைய்யின்னு!! (இத விளம்பரப் படுத்த ஒரு ‘தர’ + ‘மான’ நட்சத்திர டிவி வேறு?!)
அப்படியான்னு உங்க அறியாமையால்… நீங்க என்ன கேட்டா…?
அப்படி தான் மக்களே சொன்னங்க அப்படிப்பட்ட ஒரு இயக்குனருக்கு, எடுத்தது வெறும் நான்கே படத்துக்கு
“இது எங்க உலக சினிமா இல்லடா.. இது தாண்ட எங்க உணர்வான சினிமான்னு”
ஒருதலை பட்சமான தேசிய விருது குழுக்கூட அவ்வப்போது இவர் படத்துக்கு விருது வழங்க தவறுவதில்லை..(குற்ற உள்ள நெஞ்சு குறுக்குறுக்கும்ல)!
அந்த உணர்வான சினிமாவை மக்களின் மொழியில் எடுக்கும் முதன்மை கலைஞன்
தமிழ் இயக்குனர்களில் எங்க அண்ணன் பாலா தான்.
பாலாவின் படங்கள்…நடிகர்களில் சூப்பர் ஸ்டார்ருக்கு என்ன opening இருக்கோ.. அதே அளவில் இயக்குனர்களில் பாலாவின் படங்களுக்கு மட்டுமே அந்த உணர்வான opening இருக்கிறது..
அவரது அகராதியான, நக்கல் நையாண்டியான விகடன் பேட்டி..
பக்கத்தில் கடன் வாங்கியது தான்! பரவாயில்லை படியுங்கள்!
விகடன் பதிப்பகத்திற்கு..நன்றி!
(பாலா மக்களின் கலைஞன்..அவரது பேட்டிக்கெல்லாம் காப்புரிமை இருக்க முடியாது என்பதனை உணர்ந்து எங்கள் தளத்திலும் வெளியிடுகிறோம்)
அன்புடன்,
தர டிக்கெட்
January 15, 2011
January 6, 2011
தரடிக்கெட்டின் “சந்தீ சிரிக்குது”
எவன் எக்கேடுக்கெட்டு போனா நமக்கு என்ன என்ற சமூக உணர்வுடன்..
தரடிக்கெட் பார்வையில் நையாண்டி மேளதாளத்துடன்..இன்றைய அரசியல் நிலவரங்களை
அலசுகிறோம்!
December 30, 2010
ரசனைக்காரன் 2010 திரைப்பட விருதுகள்
தமிழ் சினிமாவில் இந்த 2010ல் அதிகப்படங்கள் வெளிவந்தாலும்..வெகு குறைவான படங்களே மக்களின் மானசீக ஆதரவைப் பெற்றது..சில புதிய முயற்சிகள் மீடியாவின் விளம்பர சூழ்ச்சிகளையும் மீறி ஓடியது என்பதே பெரிய சாதனை..அவற்றில் நாங்கள் தேர்வு செய்த படங்களை 2010ல் சிறந்த படைப்பாக இங்கே வெளியிட்டுவுள்ளோம்..மேலும் மக்களின் ஆதரவைப் பெற்ற பல வழக்கமான மசாலாப்படங்களையும் நமது கணிப்புகளில் இணைத்துள்ளோம்..
விருதுக்குழு 2010:
தர டிக்கெட், ரசனைக்காரன் விமர்சன குழு மற்றும் நண்பன் தமிழ்குமார்( சிங்கப்பூர்)
ரசனைக்காரன் 2010 திரை இசை விருதுகள்
தமிழ் சினிமாவில் இந்த 2010ல் ஒரு சில படங்களை தவிர பெரிதாக பாடல்கள் மக்களை கவரவில்லை என்பதே உண்மை. திரை இசை துறையில் புதிய முயற்சிகளும் அவ்வாரே! அவற்றில் ஹிட்டான பாடல்களை மட்டுமே இங்கே வரிசை படுத்தியுள்ளோம்.. Melody வரிசையை காதலர்களுக்கு பிடித்த பாடல் கேட்டு பெற்று அதன் அடிப்படையிலயே இங்கே வரிசை படுத்தப்பட்டுள்ளது.
விருதுக்குழு 2010:
தர டிக்கெட், ரசனைக்காரன் விமர்சன குழு மற்றும் நண்பர்கள் [ (கலைவாணி (மலேசியா), அனிலா நாயர்(கேரளா), ஹம்சா வாமணன், சதிஸ்ராஜ், விக்னேஷ் சுகுமாரன், நந்தேஷ், சேகர் (ஹோசூர்) ]
November 18, 2010
சென்னைய பத்தி..ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்
நம்ம தரடிக்கெட்டுக்கு ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்..அதுவும் சிங்கரா சென்னைய பத்தி..
October 16, 2010
ரசனைக்காரன்: அடுத்த நம்பிகையான தமிழ் சினிமாக்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-பத்மஸ்ரீ கமல்ஹசன் யுகங்களுக்கு பிறகு, (இனிமேல்) இயக்குனர் கைகளில் தான் தமிழ் சினிமா. நாங்கள் சொல்லவில்லை மக்கள் அப்படி நினைக்கிறார்கள். அவ்வாறு இனி வரவிருக்கும் திரைப்படங்களில் ஒரு ரசனைக்காரனாக ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்கள்..இதோ..
பாலாவின் அவன் இவன்
இந்தப்படத்திற்கு பெருசா விளம்பரமே தேவையில்லை.. பாலா அண்ணாச்சியின் படம்..
மொத்த இந்தியாவே அரள வைக்கும் என்பதில் ஐய்யமில்லை. எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் வசனத்தில்,
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவில். ஆர்யா, விஷால்,GK,ஜனனி அய்யர்,மது ஷாலினி மற்றும் கௌரவ
தோற்றத்தில் சூர்யாவும் நடிக்கிறார்கள்..யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் ஜெயம் ரவி, மம்தா மோகன்தாஸ் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சீமானின் பகலவன்
ஆரண்ய காண்டம்
வெற்றிமாறனின் ஆடுகளம்
AR முருகதாஸின் ஏழாம் அறிவு
சுசீந்தரனின் அழகர்சாமியின் குதிரை
செல்வராகவனின் மறவன்
மிஸ்கினின் நந்தலாலா
படம் உலகத்திரையில் தமிழனின் பெருமை பேசப்படும் என்று பார்த்தவர்கள் அனைவரும் சொல்லிவிட்டனர். இசைஞானியின் இசை கலங்க வைக்குமாம். படம் கிகுஜிரோ(kikujiro) தழுவலாக இல்லாமல் இருந்தால் ஆறுதல் தான்.
பிரபு சாலமனின் மைனா…
காட்சிகளும் பசுமையுடன் ஈர்க்கிறது..
காத்திருக்கிறோம்!
சினிமா என்கிற கலையும் ஒரு ரசனைக்காரனை பொறுத்தவரை ஒரு அழகான காதலுக்கு உரிய எதிர்பார்ப்புகள் தான்.இவற்றில் சில படங்கள் காப்பியங்களாக இருக்கலாம்..எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் இருந்தால் சரி!!






























