ரசனைக்காரன்

September 16, 2010

அழகான தமிழ் குறும்படத்திற்கு ஸ்வர்ண கமல் தேசிய விருதினை பெற்று தந்துள்ளது, ‘தி போஸ்ட்மன்’.

Filed under: Uncategorized — rasanaikaaran @ 6:27 am


இயக்குனர் மனோகர் ரெட்டி
ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம்
எடிட்டிங் லோகேஸ்வரன்
சப்த வடிவமைப்பாளர் சத்யராஜ்
இசை தீனா
தயாரிப்பு : LV பிரசாத் பிலிம் டிவி அகாடமி

சென்ற வருடம் முதல் தமிழ் குறும்படங்கள் பெரிய தாக்கத்தை கலையுலகில் ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது.  அவற்றில் என்னை மட்டுமல்ல பலரையும் ஒரு கிராமத்து வாழ்வியலுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்ட ஒரு குரும்ப்படமேன்றால் அது ‘தி போஸ்ட்மன்’ தான். இந்த அழகான குரும்படத்தை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லை, படத்தின் காட்சிகளே  நம் இதயத்தை  எளிதாக அந்த வாழ்வியலின் வலிகளுக்குள் இணைந்து கொள்ளும். முத்தாய்ப்பாக இந்த வருடத்தின் சிறந்த குறும்படத்திற்கான ஸ்வர்ண கமல் தேசிய விருதினை தமிழுக்கு  பெற்று தந்துள்ளது, ‘தி போஸ்ட்மன்’.

‘தி போஸ்ட்மன்’ குரும்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப  கலைஞர்களுக்கும்
ரசனைக்காரனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

July 11, 2010

Director பாலா அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Filed under: Uncategorized — rasanaikaaran @ 2:56 am

காக்கைகளும், ஓநாய்களும், ஏன்  தெருநாய்களும்

கலையை திருடிப்  பிழைக்கும் இவ்வேளையில்

நிமிராய் சமுக அவலங்களை படம் பிடித்து

இது தாண்டா தமிழ் சினிமாவின்

இன்னுமொரு பரிமாணம் என்று

ரசிகர்கள் எங்களை பெருமிதம் கொள்ள வைத்த

எம் காலத்து கலையுலக பிதாமகனுக்கு

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

July 10, 2010

அழகுத் திரையில் சமீபத்திய குறும்படங்கள்..

Filed under: அழகுத் திரை — rasanaikaaran @ 10:49 am

உலகமே ரசித்தது என்று சொல்லியாக வேண்டும் ”காதலில் சொதப்புவது எப்படி? என்கின்ற குறும்படத்தை!
அவ்வளவு  ரசிக்கும் படியான நடிப்பு,நேர்த்தியான திரைக்கதை, இளமையான ஒளிப்பதிவு,  திறமையான இயக்கம் என்று அணைத்து துறைகளிலும் அழகாகவே உழைத்து அசத்தியிருந்தார்கள், இந்த இளம் படக்குழுவினர்! தனியார் தொலைகாட்சியில் ஏற்கனவே புகழ் பெற்று, Facebook, orkut ஆகிய சோஷியல் தளங்களில் அணைத்து தரப்பினராலும் சமீபத்தில் அரவணைக்கப்பட்ட குறும்படங்களில் இதுவும் ஒன்று. இயக்குனர் பாலாஜி, ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நடிகர் அதித் மற்றும் படக்குழுவினர் அனைவருமே மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்! அனைவருக்குமே  வாழ்த்துக்கள் தலைவா!

அவர்களுடைய அடுத்த வெளியீடான.. “மிட்டாய் வீடு”

உளவியலை பிரதான பின்னணியில் கதையை பின்னுவதில் பாலாஜி கெட்டிகாரர் என்று நிருபித்திருக்கிறது
அவரது  இரண்டாவது முயற்சியும். மீண்டும் மிட்டாய் வீட்டிலும்  கொஞ்சம் உளவியல் வகுப்புகள் எடுப்பது போன்ற உணர்வுகளை  ஏற்படுத்தினாலும்  பார்பவரை ஈர்க்க எந்த விகிதத்திலும் தவறவில்லை இயக்குனர் பாலாஜி மற்றும் அவரது படக்குழுவினர்!

June 24, 2010

நீ கண்ணதாசனா..கண்ணன் தான் உனக்கு தாசன்!

Filed under: Uncategorized — rasanaikaaran @ 12:14 pm

கண்ணதாசனா?..
கண்ணன் தான் உனக்கு தாசன்!
என்று பல தடவை
பெருமிதம் கொண்டு இருப்பாய்!
வரலாறும் தவறில்லை
என்று உன்னை அரவணைத்து இருக்கும்!

நீ என்ன கண்ணதாசனா??
அவன் அல்லவா உனக்கு தாசன்!!

பிருந்தாவனது கண்ணனே
மயங்கி கிடந்தானே காலங்காலமாக,
அவன் கோபியர்களை
நீ உன் வார்த்தையால்

உன் வர்ணனையால்
மயக்கி கடத்தியபோது(களவாடியபோது)..
நாங்கள் எமாத்திரம்?!

உலக காதலர்களின்
பெருந்தலைவர்களில்
நீயும் ஒருவன்

உனக்கு இன்று
பிறந்தநாள்…

வாழ்த்தவில்லை..

மாறாக காதலிக்கிறோம்
உன் வார்த்தைகளை.. காலங்காலமாக!

……….ரசனைக்காரன்

June 2, 2010

isai alias isaignani இளையராஜாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

Filed under: Uncategorized — rasanaikaaran @ 6:49 am

isai alias இளையராஜா|
ഇളയരാജ| ఇళయరాజా|ಇಳಯರಾಜ | इलायाराजा |Ilayaraja | الرجا

உன் இசை
நான் உணரும் போதெல்லாம்
என் உயிரின் கண்ணீர் துளிகள்
உன் இசைப்பாதங்களை
என்றென்றும்
தழுவி..தொழுது..ஏங்கி.. நிற்க
நீ வாழும் காலத்தே
உன் பெயருடன் அடிமையாய்
என்னை அனுப்பிவைதானோ
…அந்த இறைவன்?

…ரசனைக்காரன்

January 23, 2010

தேசிய விருதை தலைநிமிர வைத்த தமிழன்..பாலா

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:14 am

அண்ணன் பாலாவுக்கு தேசிய விருது மனமுருகிய தமிழர்களின் வாழ்த்துகள்!

நான் கடவுள் படத்துக்காக சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது பாலாவுக்குக் கிடைத்துள்ளது.

தேசிய விருதை தலைநிமிர வைத்த தமிழன்..

கலக்கிட்ட அண்ணாச்சி!

பெருமையுடன்

ரசனைக்கரன் + தர டிக்கெட்

January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்…

Filed under: சினிமா — rasanaikaaran @ 12:45 pm


இந்த படத்திற்கு  விமர்சனம் ஒரு கேடா! என கண்டிப்பாக புரட்சி தலைவர் ரசிகர்களும், சோழனின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழர்கள் கண்டிப்பாக உரக்க சொல்வார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் என்கின்ற தமிழ் சினிமாவின் சாதனை பெயரை சிதைத்திருக்கிறார் செல்வராகவன்.

அந்த பெயரில் மாபெரும் சோழ  வரலாற்றை  அரைகுறையாக மன்னிக்கவும் கற்பனையாக ஆராய்ந்து, அதனை  மிகவும் கேவலமான முறையில் நிகழ் காலத்துடன் இணைத்து adventure-fanatsy என்கின்ற பித்தத்தில், செல்வராகவன் எடுத்து இருக்கும் வாந்தி தான், தற்போது பொங்கல் திருநாள் அன்று வந்து இருக்கும் இந்த படம்.

அருமையான பார்த்திபனின் நடிப்பும், ராம்ஜியின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் செய்த  எண்ணற்ற தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பும் மற்றும்   துணை நடிகர்களின் நடிப்பும்  சரியான கதை மற்றும் திரைக்கதை நகர்வுகள் இல்லாமல் வீண்ணடிக்கப்பட்டுள்ளது.

ரீமா சென் ( சந்திரமுகி பாதிப்பு), கார்த்தி (அதே பருத்தி வீரன் சாயல்), உடை அலங்காரம் செய்த எரீமா அலி..இவர்களை பரவாவில்லை என பாராட்டலாம் மன்னிக்கவும்  வாழ்த்தலாம்.

மிகவும் கேவலமானது என்றால் அது..

1.செல்வராகவனின் தைக மற்றும் ரைக்திதைக (குழம்பிய கதை மற்றும் திரைக்கதை)

2.அந்த சோழ மகாராணி, கூட்டு வல்லுறவில் கொடுமைப்படுத்தப்படும்  காட்சியில் அப்படி போடு  பாட்டு பின்னணியில்..சோழனையும் வரலாற்றையும் கற்பனை என்ற பெயரில் கேவலப்படுத்திய கொடுமை.   இது தான் சரித்திரமும் தருத்திரியமும் இணைத்து நீங்கள் ஈன்ற கற்பனை வளமையோ? செல்வரகாவா?

3.பின்னணி இசையில் இசையை கொலை செய்திருக்கின்ற  ஜீவி பிரகாஷின் பின்னணி இசை தான்  . அந்த கால தமிழிசையை பற்றி ஆராய்ந்து இசையமைத்துள்ளதாக  பேட்டிகளில் வாய்க்கூசாமல் பொய் சொல்லி இருக்கின்றார் என இப்போது வெட்ட வெளிச்சமாக உணர்த்துகிறது அவரது அனுபவமற்ற இசை.

தற்போதைய தமிழ் சினிமாவில் செல்வராகவன் ஸ்டைல் என்று சொல்லக்கூடிய கிளு கிளுப்புகளும், விடலை வசனங்களும்,  ஆங்காங்கே தூவியும், இரைத்தும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இயக்குனர் என்ற தற்பெருமை இந்த படத்திலும் பேசித்திரியலாம் செல்வராகவன்.  இந்த முறை கூடுதலாக S.A.சந்திரசேகரே வெட்கி தலைகுனிய வைக்கும்  கூட்டு  பாலியல் வல்லுறவு வேறு.

பாவம் தலைவிதியுடன் ரவீந்திரன்..

தலைவலியுடன்..தரடிக்கெட்

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

Filed under: வரவேற்பறை — rasanaikaaran @ 3:24 am

January 8, 2010

ஜனநாதனின் பேராண்மை – ஒரு பார்வை

பேராண்மை மிகுந்த தலைவரின் பிறந்தநாளில் பேராண்மை திரைப்படம் பற்றிய திறனாய்வுக் கூட்டம்.

கூட்ட ஏற்பாடு : தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, தஞ்சாவூர்.

பகுதி 1

..நாகேந்திரன் அறிமுகவுரையைத் தொடர்ந்து  ..மு.இராமசாமி பேசியது.

பகுதி2


..மு.இராமசாமி பேசியது.

பகுதி3


..மு.இராமசாமி பேசியது.

பகுதி4


..மு.இராமசாமி பேசியது.

பகுதி5


..மு.இராமசாமி பேசியது.

பகுதி6

..மு.இராமசாமி பேசியது.

பகுதி7


..நாகேந்திரன்  பேசியது.

பகுதி8


..வைகறை பேசியது.

பகுதி9

நான் நேற்றைக்குத்தான் படம் பார்த்தேன்! காட்டில் கொரில்லா யுத்த முறைகளை அந்த பெண்களுக்குக் கற்று தரும் காட்சி  பெண் புலிகளுக்கு பயிற்சி கொடுக்கிற காட்சியை நினைவுபடுதுகிறது…


..மு.இராமசாமியின் விளக்கம்.

பகுதி10

தமிழ்ச் சமுகம் மற்றும் உலக அரசியலை பேச  ஜனநாதன் பேராண்மை திரைப்படத்தை ஒரு தளமாக பயன்படுத்தி இருக்கிறார் என உறுதியாக நம்புகிறீர்களா?


..மு.இராமசாமியின் விளக்கம்.

தொடரும்…

January 1, 2010

தரடிக்கெட் பார்வையில் ரசனைக்காரன் 2009 விருதுகள்

Filed under: சினிமா — rasanaikaaran @ 1:54 am

விமர்சனக் குழு : ரசனைக்காரன் & தமிழ் குமார்

« Previous PageNext Page »

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.