ரசனைக்காரன்

December 18, 2008

ரசனைக்காரன்

Filed under: வரவேற்பறை — rasanaikaaran @ 10:52 pm
Tags: , , , , ,

தமிழன் என்றால் ரசனைக்காரன் என்பது வரலாறு..

முப்போகம் கண்ட சோழ வள நாடு விவசாயம், போர், கலை இம்மூன்றுக்கும் சோழ தமிழர்கள் தங்கள் வாழ்வியலை அற்பணிப்த்துள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்தில் போர்கள் அதிகம் நடந்தேரினாலும் சோழர்கள் கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தனர் என்கிறது வரலாற்றின் சுவடுகள்.

தெருக்கூத்தாககட்டும், தியாகராஜா ஆராதனையாகட்டும், symphonyயாகட்டும் அடி பிறழாமல் தாள தட்டுக்கு ஏற்ப தஞ்சாவூர்க்காரன் தன் தொடையில் தாளம் தட்டுவான்.. அப்போது மட்டுமல்ல இப்போதும்!

ரசனைக்காரன் என்றால் பாண்டியர்கள், சேரர்களை காட்டில்லும் கலையை அதிக ஆர்வத்துடன் வளர்த்தவர்கள் சோழர்களே என்று இலக்கியங்கள் கூறுகிறது. சோறும், சண்டையும் முடிஞ்ச பிறகு கூத்து தான் வாழ்கைன்னு திரிஞ்ச பயளுக, அவனுங்க தான். எந்த கலையையும் தவறாக…. இல்லை சற்று பிசகினாலும் விமர்சனம் செய்து கிழிக்கும் இசையறிவும் கலையரிவும் மிகுந்தவர்கள் அவர்கள். இப்படியும் வைத்துகொள்ளலாம் தமிழகத்தின் பெரும்பாண்மை பகுதிகளை சோழர்கள் ஆண்டதால் தமிழர்கள் அனைவருமே ரசனைக்காரர்களே!

அப்படி பட்ட தமிழ் மண்ணில் பிறந்த எனக்கு கலை பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும் பாமர மக்களை மெத்த படித்தவர்கள் கூறும் அடைமொழிகலான ஒரு தர டிக்கெட் அளவுக்கும், ஒரு விசில் அடிச்சன்குஞ்சு அளவுக்கும் நான் ரசித்தவைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்!

நான் எழுதும் ரசனைகள் பிடித்திருந்தால் ஏற்றுகொள்ளுங்கள், பிடிக்காவிடின் எனக்கு மறுத்து எழுதுங்கள் ரசனைக்காரர்களே!

இல்லாத இறைவன் அருளுடனும்

இருக்கும் உங்கள் அன்புடன்

ஆரம்பிக்கின்றேன்

என்னுள்ள ரசனைக்காரனை!

Theme: Rubric. Clone this site at WordPress.com

Follow

Get every new post delivered to your Inbox.